வாஸ்து தோஷத்தை போக்கும் மந்திர மயில் இறகு!

 

வாஸ்து தோஷத்தை போக்கும் மந்திர மயில் இறகு!

ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் வடிவமான மயில் மீது ஆறுமுகப்பெருமான் காட்சியளிப்பதாக புராணங்கள் கூறுகின்றன. அதனால், இந்த மயிலுக்கு ‘மந்திர மயில்’ என்ற பெயரும் உண்டு. மயில் மீது அமர்ந்திருக்கும் முருகப் பெருமானை தரிசிப்பதை ‘குக ரகசியம்’ என்றும் ‘தகராலய ரகசியம்’ என்றும் ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.

வாஸ்து தோஷத்தை போக்கும் மந்திர மயில் இறகு!
வாஸ்து தோஷத்தை போக்கும் மந்திர மயில் இறகு!

கடவுள் வழிபாட்டில், பசுமாடு, பாம்புக்கு அடுத்தப்படியாக, ஆறுமுருக பெருமானின் வாகனமான மயிலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. மயிலின் இறகை புனிதமானதாக கருதி, பலரும் வீட்டு பூஜை அறையில் சுவாமி படங்களுடன் வைத்திருப்போம்.

வீட்டில் எப்போதும் பிரச்சனையாக இருப்பதற்கு காரணம் வீட்டின் வாஸ்து தோஷமாகக் கூட இருக்கலாம். அதற்குரிய எளிய பரிகாரம் செய்து, பூஜைகளின் மூலம் வாஸ்து தோஷங்களை நீக்கலாம். அதற்காகப் பெரிய சிரமங்கள் எதுவும் படத் தேவையில்லை. வீட்டில் உள்ள தோஷங்களை நீக்கி, சந்தோஷத்தை தரக்கூடியது மயில் இறகு என்பது தெரியுமா..?

வீட்டில் தினமும் விளக்கேற்றி, ஊதுவர்த்தி காட்டி சாமி படங்களுக்கு பூஜை செய்து வந்தாலே போதும். வீட்டில் எந்த கெட்ட சக்தியும் அண்டாது. தினமும் காலையில் கிழக்கு நோக்கி தீபமேற்றி, ‘ஓம் நமோ வாஸ்து புருஷாய நமஹ’ என்ற மந்திரத்தை 27 முறை பாராயணம் செய்யலாம்.

மந்திர மயிலின் இறகானது வீட்டில் உள்ள வாஸ்து தோஷத்தை போக்கும் சக்தி கொண்டது. மயிலின் எட்டு இறகை ஒன்று சேர்த்து, ஒரு வெள்ளை நிற கயிற்றினால் கட்டி, பூஜை அறையில் வைத்து ‘ஓம் சோமாய நமஹ’ என்ற மந்திரத்தை உச்சரித்து வர வேண்டும்.

மயில் இறகை வீட்டின் முன் வைப்பதால், வீட்டினுள் எதிர்மறை ஆற்றல்கள் நுழைவதைத் தடுப்பதோடு, வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்களும் நீங்கும். மயில் இறகு வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும். அதுவும் இதனை வீட்டின் சுவற்றில் ஒட்டி வைத்தால், பல்லிகள் மற்றும் இதர பூச்சிகள் வருவதைத் தடுக்கலாம்.

வாஸ்து தோஷத்தை போக்கும் மந்திர மயில் இறகு!

-வித்யா ராஜா