துப்பு துலக்குவதில் கில்லாடி!- யார் இந்த மகேஷ்குமார் அகர்வால்?

 

துப்பு துலக்குவதில் கில்லாடி!- யார் இந்த மகேஷ்குமார் அகர்வால்?

சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த ஏ.கே.விஸ்வநாதன் இடமாற்றம் செய்யப்பட்டு அவருக்குப் பதிலாக புதிய போலீஸ் கமிஷனராக மகேஷ்குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் 39 ஐ.பி.எஸ் அதிகாரிகள் நேற்றிரவு அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சீருடை பணியாளர் தேர்வாணைய டிஜிபியாக இருந்த சுனில்குமார், மனித உரிமை கமிஷனுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மதுரை போலீஸ் கமிஷனராக பணியாற்றிய டேவிட்சன் ஆசீர்வாதம், மாநில தொழில்நுட்ப பிரிவு ஏடிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.

துப்பு துலக்குவதில் கில்லாடி!- யார் இந்த மகேஷ்குமார் அகர்வால்?

சென்னை போலீஸ் கமிஷனராக பணியாற்றிய ஏ.கே.விஸ்வநாதன், ஏடிஜிபி operation – ஆக இடமாற்றப்பட்டுள்ளார். பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு ஏடிஜிபியாக பணியாற்றிய எம்.ரவி, ஈரோடு சிறப்பு அதிரடிபடைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மாநில அமலாக்கப்பிரிவில் ஏடிஜிபியாக பணியாற்றிய மகேஷ்குமார் அகர்வால், சென்னை போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை தலைமையக ஏடிஜிபியாக பணியாற்றிய ஜெயராம், திருச்சி மண்டல ஐஜியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி மண்டல ஐஜியாக பணியாற்றிய அமல்ராஜ், சென்னை தலைமையக கூடுதல் கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை பொருளதார குற்றப்பிரிவு ஐஜியாக கணேஷ் மூர்த்தியும், சென்னை வடக்கு மண்டல கூடுதல் கமிஷனராக பணியாற்றும் தினகரன், தெற்கு மண்டல கூடுதல் கமிஷனராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை தெற்கு மண்டல கூடுதல் கமிஷனராக பணியாற்றிய பிரேம்ஆனந்த் சின்ஹா மதுரை போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனராக பணியாற்றிய அருண், சென்னை வடக்கு மண்டல கூடுதல் கமிஷனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் போலீஸ் கமிஷனராக பணியாற்றிய சஞ்சய்குமார், தொழில்நுட்ப பிரிவு ஐஜியாக இடமாற்றப்பட்டுள்ளார். சென்னை வடக்கு மண்டல இணை கமிஷனராக பணியாற்றிய கபில்குமார் சரத்கர், ஐஜியாக பதவி உயர்வு பெற்று சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். உள்நாட்டு பாதுகாப்பு டிஐஜியாக கண்ணன், ஐஜியாக பதவி உயர்வு பெற்று சென்னை போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.

விழுப்புரம் சரக டிஐஜியான சந்தோஷ்குமார், ஐஜியாக பதவி உயர்வு பெற்று சென்னை நிர்வாக பிரிவுக்கு இடமாற்றப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் டிஜஜியான தேன்மொழி, ஐஜியாக பதவி உயர்வு பெற்று சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். கோவை சரக டிஐஜியான கார்த்திகேயன், ஐஜியாக பதவி உயர்வு பெற்று திருப்பூர் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். திண்டுக்கல் சரக டிஐஜியான ஜோஷி நிர்மல்குமார், பதவி உயர்வு பெற்று எஸ்டாபிளிஸ்பென்ட் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். கடலோர பாதுகாப்பு பிரிவி டிஐஜியான பவானீஸ்வரி, ஐஜியாக பதவி உயர்வு பெற்று சென்னை பொதுப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

திருச்சி சரக டிஐஜியான பாலகிருஷ்ணன், சென்னை வடக்கு மண்டல இணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மேற்கு மண்டல இணை கமிஷனர் விஜயகுமார், கடலோர பாதுகாப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். சென்னை தலைமையக இணை கமிஷனரான ஏ.ஜி பாபு, சென்னை தெற்கு மண்டல இணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார். சென்னை தெற்கு மண்டல இணை கமிஷனரான மகேஷ்வரி, தலைமையகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சென்னை தெற்கு போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனரான எழிலரசன், விழுப்புரம் சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆயுதப்படை டிஐஜி செந்தில்குமாரி, சென்னை தலைமையகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். மதுரை சரக டிஐஜி ஆனி விஜயா, திருச்சி சரகத்துக்கும் ராமநாதபுரம் டிஐஜி, ரூபேஷ்குமார் மீனா தஞ்சைக்கும் சென்னை நிர்வாக பிரிவு டிஐஜி நரேந்திரன் நாயர் கோவை சரகத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

எஸ்.பிஅபிஷேக் தீட்சீத், டிஐஜியாக பதவி உயர்வு பெற்று மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டுள்ளார். சிபிசிஐடி எஸ்.பி மல்லிகா, டிஐஜியாக பதவி உயர்வு பெற்று அதே பிரிவில் பணியமர்த்தப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி சாமுண்டீஸ்வரி, பதவி உயர்வு பெற்று காஞ்சிபுரம் டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை வணிக குற்றப் புலனாய்வு பிரிவு எஸ்.பி லட்சுமி, பதவி உயர்வு பெற்று சென்னை தெற்கு போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி ராஜேஸ்வரி பதவி உயர்வு பெற்று சென்னை ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார். சீருடை பணியாளர் தேர்வாணை எஸ்.பி பாண்டியன் பதவி உயர்வு பெற்று ரயில்வே டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.

சென்னை பூக்கடை துணை கமிஷனராக பணியாற்றிய ராஜேந்திரன் டிஐஜியாக பதவி உயர்வு பெற்று மதுரை சரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். சென்னை அண்ணாநகர் துணை கமிஷனர் முத்துச்சாமி டிஐஜியாக பதவி உயர்வு பெற்று திண்டுக்கல் சரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். சென்னை தெற்கு போக்குவரத்து இணை போலீஸ் கமிஷனரான மயில்வாகணன், டிஐஜியாக பதவி உயர்வு பெற்று ராமநாதபுரத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். சென்னை பாதுகாப்பு பிரிவு துணை கமிஷனரான ராதாகிருஷ்ணன், விழுப்புரம் எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார். ஒரே நேரத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

துப்பு துலக்குவதில் கில்லாடி!- யார் இந்த மகேஷ்குமார் அகர்வால்?

யார் இந்த மகேஷ்குமார் அகல்வால்?

மகேஷ்குமார் அகர்வால் 1994-ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி. இவர் சட்டம் பயின்றவர். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இவர், 22 வது வயதில் ஐபிஎஸ் அதிகாரியானார். தேனி எஸ்பி, தூத்துக்குடி எஸ்பி, 2001-ல் சென்னை பூக்கடை துணை கமிஷனர், சென்னை போக்குவரத்து காவல் தெற்கு துணை கமிஷனராக பணியாற்றியுள்ளார். சிபிசிஐடி ஐஜியாகவும் மதுரை கமிஷனராகவும் பணியாற்றியுள்ளார். இவரின் மனைவி பேராசிரியயை. சிபிஐ எஸ்.ஐ-யாகவும் பணியாற்றியுள்ளார். இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். வழக்குகளை துப்பு துலக்குவதில் திறமையானவர். அதனால்தான் அவருக்கு சென்னை போலீஸ் கமிஷனர் பதவி வழங்கப்பட்டுள்ளது. கடந்த மூன்றாண்டுகளாக ஏ.கே.விஸ்வநாதன், சென்னை மாநகரத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாதவகையில் செயல்பட்டார். அதைப் போல மகேஷ்குமார் அகர்வாலும் சிறப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கையில் அவர் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை போலீஸ் கமிஷனர் பதவிக்கு போட்டிபோட்ட ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கிடையே மகேஷ்குமார் அகர்வாலுக்கு ஆளுங்கட்சியினரின் ஆசியால் அவரின் பெயர் டிக் அடிக்கப்பட்டுள்ளது.