கஞ்சா விற்ற இளைஞர் கைது – 1.5 கிலோ கஞ்சா பறிமுதல்
Oct 22, 2020, 15:38 IST1603361315000
மதுரை
மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அப்பகுதியில் காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், சஞ்சீவ்குமார்
என்ற இளைஞர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைதுசெய்த போலீசார், அவரிடம் இருந்து 1.5 கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்..