“7 பேர் விவகாரத்தில் முதல்வர் நல்ல முடிவை எடுப்பார்” – செல்லூர் ராஜூ

 

“7 பேர் விவகாரத்தில் முதல்வர் நல்ல முடிவை எடுப்பார்” – செல்லூர் ராஜூ

மதுரை

7.5 சதவீத உள்ஒதுக்கீடு எப்படி வல்லுனர் குழு மூலம் ஆய்வுசெய்து பெறப்பட்டதோ, அதேபோன்று ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேருக்கும் நல்ல முடிவை முதலமைச்சர் எடுப்பார் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். மதுரை செல்லூரில் அமைக்கப்பட்டு வரும் கபடி வீரர்களின் சிலையை பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை

“7 பேர் விவகாரத்தில் முதல்வர் நல்ல முடிவை எடுப்பார்” – செல்லூர் ராஜூ

தெரிவித்தார். மேலும், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேரும் தூக்குமேடைக்கு செல்வதை தடுத்து நிறுத்தி, அவர்களுக்கு வாழ்வளித்தது அதிமுக அரசு தான் என்றும் அமைச்சர் கூறினார்.

“7 பேர் விவகாரத்தில் முதல்வர் நல்ல முடிவை எடுப்பார்” – செல்லூர் ராஜூ

மேலும், அமைச்சர் துரைக்கண்ணு இறப்பு குறித்து ஸ்டாலின் கூறுவது, எதிர்க்கட்சி தலைவர் ஏதாவது சொல்ல வேண்டும் என்பதற்காக கூறி வருவதாகவும், அதனை பொருட்டாக கருத வேண்டாம் எனவும் கூறிய செல்லூர் ராஜூ, தமிழக பாஜக தலைவர் முருகன், தனது கட்சியினரை உற்சாகப்படுத்தும் நோக்கில் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருவதாகவும் அவர் கூறினார்.