பாஜகவில் சேர்ந்தேனா? நான் எந்த கட்சியிலும் இல்லங்க- பிரதமர் பாராட்டிய மோகன் பேட்டி

 

பாஜகவில் சேர்ந்தேனா? நான் எந்த கட்சியிலும் இல்லங்க- பிரதமர் பாராட்டிய மோகன் பேட்டி

மோடி பாராட்டிய முடிதிருத்தும் தொழில் செய்பவரின் குடும்பத்தினர் பாஜகவில் இணைந்ததாக தகவல் கசிந்த நிலையில் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் இந்தியாவை முற்றிலுமாக புரட்டி போட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா 7 ஆவது இடத்தில் இருப்பதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகின. இதனை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வந்தாலும், கொரோனா பாதிப்பு குறைந்ததாக இல்லை. இதனால் புதிய தளர்வுகளுடன் 5 ஆம் கட்ட ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய மக்களுக்கு பலர் உதவி வருகின்றனர். அதே போல மதுரை மேலடை பகுதியில் வசித்து வரும் மோகன் என்னும் முடிதிருத்தும் தொழில் செய்து வருபவர் தனது மகளின் கல்வி செலவுக்கு சேமித்து வைத்திருந்த ரூ.5 லட்சம் பணத்தை ஏழைகளுக்கு உதவினார். இதையடுத்து நேற்று மான் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, மோகனுக்கு தனது பாராட்டுகளை தெரிவிப்பதாக குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், பிரதமரிடம் பாராட்டு பெற்ற மோகன் அவரது குடும்பத்தினருடன் மதுரை மாநகர தலைவர் சீனிவாசன் முன்னிலையில் பா.ஜ.கவில் இணைந்ததாக புகைப்படங்கள் வெளியானது.

பாஜகவில் சேர்ந்தேனா? நான் எந்த கட்சியிலும் இல்லங்க- பிரதமர் பாராட்டிய மோகன் பேட்டி

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மோகன், “பாஜகவில் இணைந்ததாக வெளியான தகவலில் உண்மை இல்லை. அவர்கள் கொடுத்த அடையாள அட்டை வாழ்த்து அட்டை என நினைத்தேன். என்னை எந்த கட்சிக்குள்ளும் அடைக்க வேண்டாம், பாஜகவில் இணைந்ததாக வெளியான செய்தி எனக்கு மன அழுத்தத்தை கொடுக்கிறது. எல்லா கட்சிகளும் எனக்கு முக்கியம். தனிப்பட்ட கட்சி ஆள் இல்லை. நான் பொதுவான ஆள்.  பாரதப்பிரதமரும், எதிர்க்கட்சித்தலைவரும், முதல்வரும் எனக்கு பாராட்டுக்கள் தெரிவித்தனர். நான் தற்போது எந்தக்கட்சியிலும் இல்லை” என கூறினார்.