மோடியிடம் பாராட்டு பெற்ற மதுரை சலூன் கடைக்காரர்.. குடும்பத்துடன் பா.ஜ.கவில் இணைந்தார்!

 

மோடியிடம் பாராட்டு பெற்ற மதுரை சலூன் கடைக்காரர்.. குடும்பத்துடன் பா.ஜ.கவில் இணைந்தார்!

கொரோனா வைரஸ் இந்தியாவை முற்றிலுமாக புரட்டி போட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா 7 ஆவது இடத்தில் இருப்பதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகின. இதனை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வந்தாலும், கொரோனா பாதிப்பு குறைந்ததாக இல்லை. இதனால் புதிய தளர்வுகளுடன் 5 ஆம் கட்ட ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.

மோடியிடம் பாராட்டு பெற்ற மதுரை சலூன் கடைக்காரர்.. குடும்பத்துடன் பா.ஜ.கவில் இணைந்தார்!

இந்த ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய மக்களுக்கு பலர் உதவி வருகின்றனர். அதே போல மதுரை மேலடை பகுதியில் வசித்து வரும் மோகன் என்னும் முடிதிருத்தும் தொழில் செய்து வருபவர் தனது மகளின் கல்வி செலவுக்கு சேமித்து வைத்திருந்த ரூ.5 லட்சம் பணத்தை ஏழைகளுக்கு உதவியுள்ளார். நேற்று மான் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, மோகனுக்கு தனது பாராட்டுகளை தெரிவிப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், பிரதமரிடம் பாராட்டு பெற்ற மோகன் அவரது குடும்பத்தினருடன் மதுரை மாநகர தலைவர் சீனிவாசன் முன்னிலையில் பா.ஜ.கவில் இணைந்துள்ளார். அவர்கள் அனைவரையும் பொன்னாடை போற்றி பா.ஜ.கவினர் அவர்களது கட்சியில் இணைத்துக் கொண்டனர்.