“மாஸ்க் அணியாமல் வெளியே வந்தால் அபராதம்” : இதுவரை மதுரையில் 1 லட்சத்து 83 ஆயிரம் வசூல்!

 

“மாஸ்க் அணியாமல் வெளியே வந்தால் அபராதம்” : இதுவரை மதுரையில் 1 லட்சத்து 83 ஆயிரம் வசூல்!

கொரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 786 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14,753 ஆக அதிகரித்துள்ளது.

“மாஸ்க் அணியாமல் வெளியே வந்தால் அபராதம்” : இதுவரை மதுரையில் 1 லட்சத்து 83 ஆயிரம் வசூல்!

இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட நடைமுறைகளை பின்பற்றுமாறு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

“மாஸ்க் அணியாமல் வெளியே வந்தால் அபராதம்” : இதுவரை மதுரையில் 1 லட்சத்து 83 ஆயிரம் வசூல்!

அந்த வகையில் மதுரையில் முகக்கவசம் அணியாமல் சாலையில் வாகனங்களில் வந்தவர்கள் , நடந்து சென்றவர்களிடம் கடந்த 2 நாட்களாக அபராத தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இதுவரை சுமார் 1762 பேரிடம் அபராத தொகையாக ரூபாய் ஒரு லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.

“மாஸ்க் அணியாமல் வெளியே வந்தால் அபராதம்” : இதுவரை மதுரையில் 1 லட்சத்து 83 ஆயிரம் வசூல்!

முன்னதாக சென்னையில் முகக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளிடமிருந்து நேற்று ஒரே நாளில் 10 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.