மலேசியாவில் இருந்து போலி பாஸ்போர்ட்டில் திருச்சி வந்த நபர் கைது!

 

மலேசியாவில் இருந்து போலி பாஸ்போர்ட்டில் திருச்சி வந்த நபர் கைது!

திருச்சி

மலேசியாவில் இருந்து போலி பாஸ்போர்ட் மூலம் திருச்சிக்கு விமானத்தில் வந்த மதுரையை சேர்ந்த பயணியை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று மலேசியாவில் இருந்து வந்த விமான பயணிகளின் பாஸ்போர்ட்டை, குடியுமை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, மதுரை மேலூரை அடுத்த மேலவளவு பகுதியை சேர்ந்த மகேஷ் (45) என்ற பயணி போலி பாஸ்போர்ட்டில் வந்தது தெரியவந்தது.

மலேசியாவில் இருந்து போலி பாஸ்போர்ட்டில் திருச்சி வந்த நபர் கைது!

இதனை அடுத்து, குடியுரிமை அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், மகேஷ் கடந்த 2019ஆம் ஆண்டு தமிழகத்தில் இருந்து கொல்கத்தா, வங்கதேசம், மியான்மர், தாய்லாந்து வழியாக தரை மார்க்கமாக முறைகேடாக மலேசியா சென்றது தெரியவந்தது.

மேலும், அங்கு ஓட்டலில் பணிபுரிந்தவரை அந்நாட்டு போலீசார் கைதுசெய்து, பின்னர் விடுவித்ததும் தெரியவந்தது. இதனை அடுத்து, மகேஷை திருச்சி விமான நிலைய போலீசாரிடம், குடியுரிமைப் பிரிவு அதிகாரிகள் ஒப்படைத்தனர். அங்கு மகேஷ் மீது வழக்குப்பதிவு செய்து கைதுசெய்த போலீசார், அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.