“தமிழகத்தில் 3-வது அணி அமைய வாய்ப்பு” – விஜய பிரபாகரன் பேட்டி

 

“தமிழகத்தில் 3-வது அணி அமைய வாய்ப்பு” – விஜய பிரபாகரன் பேட்டி

மதுரை

தமிழகத்தில் வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் மூன்றாவது அணி அமைய வாய்ப்பு உள்ளதாக, தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தின் இளைய மகன் விஜய பிரபாகரன் தெரிவித்தார். மதுரை காளவாசல் பகுதியில் நடந்த கட்சி நிர்வாகி இல்லத்திருமண விழாவில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனை தெரிவித்தார். மேலும், திமுக, அதிமுகவுக்கு மாற்று தேமுதிக மட்டுமே என்பதை நிரூபித்து காட்டியுள்ளோம் என்று கூறிய அவர்,

“தமிழகத்தில் 3-வது அணி அமைய வாய்ப்பு” – விஜய பிரபாகரன் பேட்டி

தேமுதிக நினைத்தால் மூன்றாவது அணி அமைக்க முடியும் என்றும் தெரிவித்தார். மேலும், வரும் சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் விஜயகாந்த் பிரசாரம் செய்வார் என்றும், மக்களை பார்க்க வேண்டும் என்பதே அவரின் விருப்பம் என்றும் விஜய பிரபாகரன் தெரிவித்தார்.