மதுரை-மும்பை இடையே மீண்டும் விமான சேவை: ஏர் இந்தியா அறிவிப்பு!

 

மதுரை-மும்பை இடையே மீண்டும் விமான சேவை: ஏர் இந்தியா அறிவிப்பு!

கொரோனாவால் நிறுத்தப்பட்டிருந்த மதுரை-மும்பை இடையேயான விமான சேவை மீண்டும் தொடங்கப்படுவதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ஏர் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா அச்சுறுத்தலால் கடந்த மார்ச் மாதம் நிறுத்தப்பட்ட மதுரை-மும்பை இடையேயான விமான சேவை, வரும் 25ம் தேதி முதல் தொடங்கவிருப்பதாகவும் அந்த விமான சேவை மும்பை- சென்னை- மதுரை- சென்னை-மும்பை வரை இயங்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மதுரை-மும்பை இடையே மீண்டும் விமான சேவை: ஏர் இந்தியா அறிவிப்பு!

அந்த விமானம் காலை 9.15 மணிக்கு மும்பையில் இருந்து புறப்பட்டு, 11.15 மணிக்கு சென்னை சென்றடையும் என்றும் மீண்டும் பிற்பகல் 12.15 மணிக்கு புறப்பட்டு 1.10 மணிக்கு மதுரை சென்றடையும் என்றும் மதுரையில் இருந்து 1.55 மணிக்கு புறப்பட்டு மீண்டும் சென்னை சென்றடையும் என்றும் 4.05 மணிக்கு புறப்பட்டு 6.15 மணிக்கு மும்பை என்றடையும் என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

மேலும், விமான சேவையை அணுகும் பயணிகளின் வருகையை பொறுத்து கட்டணத்தில் மாறுபாடு இருக்கக்கூடும் என்றும் www.airindia.in என்ற இணையத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.