கைலாசாவில் மருது சகோதரர்களுக்கு நினைவில்லம் அமைக்க கோரி கடிதம்

 

கைலாசாவில் மருது சகோதரர்களுக்கு நினைவில்லம் அமைக்க கோரி கடிதம்

மதுரை

கைலாசா நாட்டில் மருது சகோதரர்களுக்கு நினைவாலயம் அமைக்க வலியுறுத்தி, நித்யானந்தாவிற்கு மருதிருவரின் மக்கள் களம் என்ற அமைப்பு கடிதம் மற்றும் போஸ்டர்கள் மூலமாக கோரிக்கை
விடுத்துள்ளது.
இதுதொடர்பாக, மதுரை மாநகரம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில், சிவகங்கையில் ஆன்மீக ஆட்சிசெய்த ஆன்மீக கொடைவள்ளல் மாமன்னர் மருது சித்தர்களுக்கு 219-வது அரசு மற்றும் ஆன்மிக திருவிழா நடைபெற உள்ளதாகவும்,

கைலாசாவில் மருது சகோதரர்களுக்கு நினைவில்லம் அமைக்க கோரி கடிதம்

இதனையொட்டி, கைலாச நாட்டில் மாமன்னர் மருது சித்தர்களுக்கு நினைவாலயம் அமைக்க அனுமதி வேண்டும் என தமிழ் சமூகத்தின் சார்பில் நித்யானந்தாவிற்கு வேண்டுகோள் விடுப்பதாகவும் அதில் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நித்யானந்தாவிற்கு கடிதம் மூலம் வலியுறுத்தி உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.