மதுரை- கள்ளக்காதல் விவகாரத்தில் வழக்கறிஞர் அடித்துக் கொலை

 

மதுரை- கள்ளக்காதல் விவகாரத்தில் வழக்கறிஞர் அடித்துக் கொலை

மதுரையில் கள்ளக்காதல் விவகாரத்தில் வழக்கறிஞரை அடித்துகொன்ற நண்பர் உட்பட 2 பேரை போலீசார் கைதுசெய்தனர். மதுரை மாவட்டம் சோழவந்தான் சாலை அருகே துவரிமான் வைகையாற்றங்கரையில், மானாமதுரையை சேர்ந்த வழக்கறிஞர் சாக்ரடீஸ் என்ற தேவா கொலைசெய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார்.

மதுரை- கள்ளக்காதல் விவகாரத்தில் வழக்கறிஞர் அடித்துக் கொலை

தகவல் அறிந்து அங்கு சென்ற நாகமலை புதுக்கோட்டை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைகாக மதுரை அரசு ராஜாஜி மருந்துவ
மனைக்கு அனுப்பிவைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் சாக்ரடீஸ் மீது கொலை வழக்கு நிலுவையில் உள்ளதும், பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் நீதிமன்றத்தில் ஆஜராக மதுரை வந்ததும் தெரியவந்தது. அப்போது, சாக்ரடீசின் நண்பர் செந்தில் என்பவர் தனது வீட்டிற்கு அழைத்துச்சென்று மது அருந்தியதாகவும்,

மதுரை- கள்ளக்காதல் விவகாரத்தில் வழக்கறிஞர் அடித்துக் கொலை

அப்போது சாக்ரடீஸ் செந்திலின் மனைவியுடன் தகாத உறவில் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது. இதனை கண்ட செந்தில் மனைவியை கண்டித்ததால், அவர் பிரிந்து சென்றதாகவும். இதனால் ஆத்திரமடைந்த செந்தில், சையது ஜாபர் என்பவருடன் இணைந்து சாக்ரடீசை அடித்துக்கொன்றதும் தெரியவந்தது. மேலும், உடலை ஆட்டோவில் எடுத்துச்சென்று ஆற்றில் வீசியதும் தெரியவந்தது. இதனையடுத்து செந்தில் மற்றும் சையது ஜாபரை கைதுசெய்த போலீசார், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.