நகை கணக்கீட்டாளர் வீட்டில் 31 சவரன் நகை கொள்ளை

 

நகை கணக்கீட்டாளர் வீட்டில் 31 சவரன் நகை கொள்ளை

மதுரை

மதுரையில் நகை கணக்கீட்டாளர் வீட்டின் கதவை உடைத்து 31 சவரன் நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை பழங்காநத்தம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் சண்முக விக்னேஷ்.

நகை கணக்கீட்டாளர் வீட்டில் 31 சவரன் நகை கொள்ளை

இவர் சிம்மக்கல் பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றில் நகை கணக்கீட்டாளர் ஆக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நேற்று வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்த நிலையில் இரவு மர்மநபர்கள் வீட்டின் பின்பக்க இரும்புகேட்டை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 31 சவரன் நகை மற்றும்

நகை கணக்கீட்டாளர் வீட்டில் 31 சவரன் நகை கொள்ளை

12 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச் சென்றுள்ளனர். இன்று காலை வீட்டிற்கு வந்த சண்முகவிக்னேஷ் நகை மற்றும் பணம் திருடு போனதை அறிந்து சுப்பிரமணியபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் மர்மநபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.