போலீசார் தாக்குதல்: கோவில்பட்டி சிறையில் உயிரிழந்த தந்தை, மகனின் உடல்களை உடற்கூறாய்வு செய்ய உத்தரவு

 

போலீசார் தாக்குதல்: கோவில்பட்டி சிறையில் உயிரிழந்த தந்தை, மகனின் உடல்களை உடற்கூறாய்வு செய்ய உத்தரவு

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காமராஜ் சிலைக்கு வடபுறத்தில் செல்போன் கடை நடத்தி வந்தவர் பென்னிக்ஸ். இவர் கடந்த 20 ஆம் தேதி முழு பொதுமுடக்கம் நடைமுறைகளை மீறி நீண்ட நேரம் கடையை திறந்து வைத்திருந்ததாக தெரிகிறது. இதனால் சாத்தான்குளம் போலீசார் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜை விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். காவல் நிலையத்தில் நடந்த விசாரணையில், போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணனும், ரகுகணேஷ் ஆகிய இருவரும் கூட்டாகச் சேர்ந்து தந்தை மகன் இருவரையும் கடுமையாகத் தாக்கியதுடன், போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக வழக்கு பதிவு செய்து கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர். இதையடுத்து காயம் காரணமாக ஜெயராஜ் மருத்துவச் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதை தொடர்ந்து கோவில்பட்டி கிளைச்சிறையில் இருந்த பென்னிக்ஸ் நேற்றிரவு உயிரிழக்க, ஜெயராஜ் மருத்துவமனையில் இன்று காலை பலியானார். போலீசாரின் தாக்குதலால் தான் இரண்டு உயிரிழப்புகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

போலீசார் தாக்குதல்: கோவில்பட்டி சிறையில் உயிரிழந்த தந்தை, மகனின் உடல்களை உடற்கூறாய்வு செய்ய உத்தரவு

இந்நிலையில் கோவில்பட்டி சிறையில் உயிரிழந்த தந்தை, மகனின் உடல்களை3 மருத்துவர்கள் கொண்ட குழு உடற்கூராய்வு செய்ய பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. உடற்கூடாய்வை வீடியோவாக பதிவு செய்யவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.