சாத்தான்குளம் வழக்கில் கைதான போலீசாரை சிபிஐ காவலில் தாக்கி துன்புறுத்தக்கூடாது- மதுரை நீதிமன்றம்

 

சாத்தான்குளம் வழக்கில் கைதான போலீசாரை சிபிஐ காவலில் தாக்கி துன்புறுத்தக்கூடாது- மதுரை நீதிமன்றம்

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் செல்போன் கடை வைத்திருந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னீக்ஸ் ஆகியோரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர், அவர்களை அடித்துக் கொன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த மரணம் குறித்த சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் விசாரித்து வந்தனர். இந்த நிலையில் தமிழக அரசின் உத்தரவின்படி வழக்கை கடந்த 10-ம் தேதி சி.பி.ஐ. தன் வசப்படுத்திக் கொண்டது. இந்த கொலை வழக்கு தொடர்பாக சாத்தான்குளம், கோவில்பட்டியில் ஆகிய இடங்களில் சிபிஐ விசாரணை நடத்தியது. இந்தநிலையில் விசாரணையின் ஒரு பகுதியை முடித்த சி.பி.ஐ, 4 காவலர்களுடன் நேற்று மாலை மதுரைக்கு வந்தனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 காவலர்கள் மதுரை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.

சாத்தான்குளம் வழக்கில் கைதான போலீசாரை சிபிஐ காவலில் தாக்கி துன்புறுத்தக்கூடாது- மதுரை நீதிமன்றம்

இந்நிலையில் சாத்தான்குளம் வழக்கில் கைதான போலீசாரை சிபிஐ காவலில் தாக்கி துன்புறுத்தக்கூடாது என்றும், மன அழுத்தம் ஏற்படும் படி விசாரணை மேற்கொள்ளக்கூடாது எனவும் சிபிஐ அதிகாரிகளுக்கு மதுரை நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.