மேலூர் அருகே ஒருவர் வெட்டி படுகொலை… டிஎஸ்பி நேரில் விசாரணை…

 

மேலூர் அருகே ஒருவர் வெட்டி படுகொலை… டிஎஸ்பி நேரில் விசாரணை…

மதுரை

மேலூர் அருகே முன்விரோதம் காரணமாக விவசாயி வெட்டிப் படுகொலை செய்யப்பாட்டார்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள கொட்டக்குடி பகுதியை சேர்ந்தவர் விவசாயி ராமச்சந்திரன். இவர் தனது அண்ணன் மகன் திவாகர் என்பவருடன் இன்று மதியம் மேலூருக்கு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தார். கொட்டக்குடி விளக்கு அருகே சென்றபோது, 2 இருசக்கர வாகனங்களில் வந்த மர்மநபர்கள் சிலர், ராமச்சந்திரனை வழி மறித்து அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் வெட்டினர்.

மேலூர் அருகே ஒருவர் வெட்டி படுகொலை… டிஎஸ்பி நேரில் விசாரணை…

மேலும், அதனை தடுக்க முயன்ற திவாகரையும் அவர்கள் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். இதில் தலை மற்றும் கழுத்துப் பகுதிகளில் பலத்த காயமடைந்த ராமச்சந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். திவாகர் பலத்த காயம் அடைந்தார். தகவல் அறிந்த மேலூர் டிஎஸ்பி ரகுபதி ராஜா சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திவாகரை மீட்டு மேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், ராமச்சந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். ராமச்சந்திரனுக்கு அதே பகுதியை சேர்ந்த மற்றொரு தரப்பினருடன் முன்விரோதம் இருந்து வந்த நிலையில், அவர்கள் கொலையில் ஈடுபட்டனரா? என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.