மதுரை: பொதுமுடக்கம் மேலும் 2 நாட்கள் நீட்டிப்பு!

 

மதுரை: பொதுமுடக்கம் மேலும் 2 நாட்கள் நீட்டிப்பு!

மதுரையில் இன்று மேலும் 320 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அம்மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,077ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 1,803 ஆக உள்ள நிலையில் 4,163 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த மூன்று நாட்களாக மதுரையில் கொரோனா பரவல் சற்று குறைந்து வருவது கவனிக்கத்தக்கது.

மதுரை: பொதுமுடக்கம் மேலும் 2 நாட்கள் நீட்டிப்பு!

இந்நிலையில் மதுரையில் முழு பொதுமுடக்கம் இன்று நள்ளிரவுடன் முடிவடையவுள்ள நிலையில் ஜூலை 14ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மேற்கு உள்ளிட்ட பகுதிகளில் முழு பொதுமுடக்கம் அமலில் இருக்கும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜூலை 15ஆம் தேதி முதல் ஏற்கெனவே இருந்த பொதுமுடக்கம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அம்மாவட்டம் முழுவதும் காய்ச்சல் முகாம்களை விரிவுப்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.