மதுரை காவல் துணை ஆணையருக்கு கொரோனா தொற்று உறுதி!
Jul 30, 2020, 10:39 IST1596085754000
தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 6,426 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,34,114 ஆக அதிகரித்துள்ளது.
மதுரையை பொறுத்தவரையில் இன்று மேலும் 266 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் அங்கு மொத்த தொற்று பாதிப்பு 10,884 ஆக அதிகரித்துள்ளது. இன்று மருத்துவக்குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ள நிலையில் மதுரையில் தொற்று அதிகமாகி வருவதால் இம்மாவட்டத்திற்கு தளர்வுகள் அளிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் மதுரை காவல் துணை ஆணையருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. துணை ஆணையர் பாஸ்கரனுக்கு கொரோனா கண்டறியப்பட்ட நிலையில் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.