மாணவர்களை கட்டாயப்படுத்தினால் பள்ளிகள் மீது நடவடிக்கை – ஐகோர்ட் எச்சரிக்கை!

 

மாணவர்களை கட்டாயப்படுத்தினால் பள்ளிகள் மீது நடவடிக்கை –  ஐகோர்ட் எச்சரிக்கை!

நேரடி வகுப்புகளுக்கு வரும் படி மாணவர்களை கட்டாயப்படுத்தினால் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 1ம் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. சுழற்சி முறையில் பாடங்கள் நடத்தப்படுகின்றன. கொரோனா காலக்கட்டத்தில் மாணவர்கள் விருப்பம் இருந்தால் பள்ளிக்கு வர அரசு அறிவுறுத்தியுள்ளது. மாணவர்களை கட்டாயப்படுத்தி வரவழைக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளது. எனினும், சில பள்ளிகள் மாணவர்களை நேரடி வகுப்புகளுக்கு வரும் படி கட்டாயப்படுத்துவதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

மாணவர்களை கட்டாயப்படுத்தினால் பள்ளிகள் மீது நடவடிக்கை –  ஐகோர்ட் எச்சரிக்கை!

அந்த பொதுநல வழக்கில், தமிழகத்தில் நேரடியாகவும் ஆன்லைன் மூலமாகவும் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. 18 வயதுக்கு கீழே இருப்பவர்களுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாமல் இருக்கிறது. சில பள்ளிகள் மாணவர்களை நேரடி வகுப்புகளுக்கு வருமாறு கட்டாயப்படுத்துகின்றன. எனவே 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மாணவர்களை கட்டாயப்படுத்தும் பள்ளிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் என்று கூறினர். இது குறித்து தமிழக முதன்மை செயலாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வரும் 30-ஆம் தேதி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.