ஆர்எஸ்எஸ் தலைவர் மதுரை வருகை- மாநகராட்சி ‘தட புட’ லாக ஏற்பாடு!

 

ஆர்எஸ்எஸ் தலைவர் மதுரை வருகை- மாநகராட்சி ‘தட புட’ லாக ஏற்பாடு!

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்பகவத் மதுரைக்கு நாளை ஜூலை 22 ஆம் தேதி இரவு மதுரை வருகையை முன்னிட்டு அவர் செல்லும் சாலைகளை சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளுமாறு மாநகராட்சி துணை ஆணையர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஆர்எஸ்எஸ் தலைவர் மதுரை வருகை- மாநகராட்சி ‘தட புட’ லாக ஏற்பாடு!

இதுகுறித்து மாநகராட்சி துணை ஆணையர் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் மதுரை சத்தியசாய் நகரில் உள்ள சாய்பாபா கோயிலில் உள்ள நிகழ்ச்சிகளில் 22 ஆம் தேதி முதல் 26 அம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். அதனால், அவரது வருகையை முன்னிட்டு விமான நிலையத்தில் இருந்து அவர் கலந்து கொள்ள இருக்கும் நிகழ்ச்சிகளுக்கான இடங்களை தெரிந்து நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களுக்கான வழித்தடங்களில் உள்ள சாலைகளை சீரமைத்தால், தெருவிளக்குகளை பராமரித்தல், சாலைகளை சுத்தமாக வைத்தல் போன்ற பணிகளை செய்திட வேண்டும்.

ஆர்எஸ்எஸ் தலைவர் மதுரை வருகை- மாநகராட்சி ‘தட புட’ லாக ஏற்பாடு!

அவர் பயணிக்கும் நேரங்களில் சாலைகளில் மாநகராட்சி பணிகளான சீரமைப்பு பணிகள் எதுவும் நடைபெறால் இருப்பதை கண்காணித்தல் போன்ற பணிகளை கவனித்து வர அனைத்து முண்டல அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவை கடுமையாக எதிர்த்துவரும் திமுக, ஆர்.எஸ்.எஸ் தலைவருக்கு இவ்வளவும் முக்கியத்துவம் கொடுப்பது ஏன்? எனவும், பிரதமர், முதல்வருக்கு இணையான பாதுகாப்பு உள்ளிட்ட வசதிகளை வழங்குவது ஏன்? எனவும் கேள்விகளை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் எழுப்பிவருகின்றனர்.