மதுரையில் இன்று ஒரே நாளில் 320 பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி!
Jul 16, 2020, 10:34 IST1594875899000
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,496 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,51,820 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா பாதித்த நபர்களின் மொத்த எண்ணிக்கை 80,961 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் மதுரையில் இன்று மேலும் 320 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அம்மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,651ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 3,855ஆக உள்ள நிலையில் 3,347 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.