தேவர் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் மரியாதை

 

தேவர் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் மரியாதை

மதுரை

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை நிகழ்ச்சியையொட்டி, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது முழு உருவ சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, உதயகுமார் ,திண்டுக்கல் சீனிவாசன், காமராஜ், கடம்பூர் ராஜு, விஜயபாஸ்கர்,

தேவர் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் மரியாதை

ஓ.எஸ்.மணியன் உள்ளிட்டோரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர், அனைவரும் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்திற்கு கார் மூலம் புறப்பட்டு சென்றனர். இதனை தொடர்ந்து, முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் அக்கட்சி

தேவர் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் மரியாதை

நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனிடையே, கொரோனா தொற்று காரணமாக பொதுமக்கள் பால்குடம் எடுத்து வர மாவட்ட நிர்வாகம் தடை விதித்ததால, சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி சென்றனர்.