மதுரை மத்திய சிறை கைதி தூக்கிட்டு தற்கொலை!

 

மதுரை மத்திய சிறை கைதி தூக்கிட்டு தற்கொலை!

மதுரை மத்திய சிறையில் கைதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மத்திய சிறை கைதி தூக்கிட்டு தற்கொலை!

கொள்ளை வழக்கில் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர் கைதி திருப்பதி. கடந்த 2011 ஆம் ஆண்டில் நடந்த கொள்ளை தொடர்பாக கைதான திருப்பதி சிறையில் உள்ள தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் திருப்பதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மதுரை மத்திய சிறை கைதி தூக்கிட்டு தற்கொலை!

அத்துடன் திருப்பதி தற்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சக கைதிகள் மத்தியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த மாதம் 15 ஆம் தேதி கோவை மத்திய சிறையில் திருட்டு வழக்கில் கைதுசெய்யப்பட்ட கொடைக்கானல் காந்திபுரம் பகுதியை சேர்ந்த சுரேஷ் ராஜா என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.