பாஜகவின் கனவு நிறைவேறாது – மாணிக்தாகூர் எம்.பி பேட்டி
Oct 23, 2020, 17:20 IST1603453803000
மதுரை
தமிழகத்தில் நடிகர்களை எல்லாம் கட்சியில் சேர்த்து வெற்றி பெறலாம் என்ற பாஜகவின் கனவு ஒருபோதும் நடக்காது என்று விருதுநகர் தொகுதி எம்.பி.மாணிக்தாகூர் தெரிவித்தார். மதுரை மாவட்டம் வலையங்குளம்
பகுதியில் தேசிய நெடுஞ்சாலையின் மீது மேம்பாலம் அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசு வருமான வரித்துறையை கையில் வைத்துக்கொண்டு கோடம்பாக்கத்தில் இருக்கும்
நடிகர்கள் அனைவரையும் மிரட்டி வருவதாகவும் தெரிவித்தார். மேலும், 7.5 சதவீத உள் ஒதுக்கீடு தொடர்பான சட்டமுன்வடிவை அமல்படுத்தாமல் கவர்னர்
காலம் தாழ்த்தி வருவது அவமதிப்புக்குரிய செயல் என்றும், ஆளுநர் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.