ஆட்டோ ஓட்டுநர் மர்ம மரணம் – போலீசார் விசாரணை
Oct 24, 2020, 15:06 IST1603532185000
மதுரை
மதுரை தனக்கன்குளம் பர்மா காலனியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் கார்த்திகேயன் (35). இவருக்கு திருமணமாகி விவாகரத்து நடைபெற்றுள்ளது.
இந்த நிலையில் கார்த்திகேயன் இன்று காலை பசும்பொன் நகர் புறவழிச்சாலை பாலத்தின் அருகில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.
தகவலின் பேரில், சுப்பிரமணியபுரம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.