மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை குழும தலைவர் சீனிவாசன் காலமானார்!
May 24, 2021, 21:13 IST1621871034000
அரவிந்த் கண் மருத்துவமனை அரசு மருத்துவராக இருந்து ஓய்வு பெற்ற ஜி. வெங்கடசாமி என்பவரால் மதுரையில் சுமார் 11 படுக்கை வசதிகளுடன் 1976ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அதன்பின் அந்த மருத்துவமனை நன்கு வளர்ச்சியடைந்து தேனி, திருநெல்வேலி, கோயம்புத்தூர், புதுச்சேரி போன்ற ஊர்களிலும் கிளைகளை அமைத்துக் கொண்டு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பல ஊர்களில் இலவசக் கண் சிகிச்சைக்கான கண் புரை நோய் மருத்துவ முகாமை நடத்தி கண்பார்வைக் குறைபாடு உடையவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை அளித்து வருகிறது.
புகழ்பெற்ற அந்த மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை குழும தலைவர் சீனிவாசன் மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது இறுதிச் சடங்கு நாளை காலை நடைபெறும் என மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.