மதுரையில் மேலும் 225 பேருக்கு கொரோனா உறுதி; திருவண்ணாமலையிலும் அதிகரிக்கும் பாதிப்பு!

 

மதுரையில் மேலும் 225 பேருக்கு கொரோனா உறுதி; திருவண்ணாமலையிலும் அதிகரிக்கும் பாதிப்பு!

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இன்று புதிதாக 4,807 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,65,714 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 84,598 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் சென்னையில் பாதிப்பு குறைந்து வருவதாக மாநகராட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, சென்னையில் இருந்து சென்றவர்கள் மூலமாக சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

மதுரையில் மேலும் 225 பேருக்கு கொரோனா உறுதி; திருவண்ணாமலையிலும் அதிகரிக்கும் பாதிப்பு!

இந்த நிலையில் திருவண்ணாமலை மற்றும் மதுரை மாவட்டங்களின் கொரோனா பாதிப்பு விவரம் வெளியாகியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 135 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,912 ஆக அதிகரித்துள்ளது. அதே போல மதுரை மாவட்டத்திலும் மேலும் 225 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,269 ஆக அதிகரித்துள்ளது. மேலும் அம்மாவட்டத்தில் கொரோனாவில் இருந்து 4,758 பேர் குணமடைந்துள்ள நிலையில், 3,364 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.