மதுரையில் கொரோனா பாதிப்பு 10,317 ஆக உயர்வு : புதுக்கோட்டையிலும் தீவிரமாகும் தொற்று!

 

மதுரையில் கொரோனா  பாதிப்பு  10,317 ஆக உயர்வு : புதுக்கோட்டையிலும் தீவிரமாகும் தொற்று!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 6,993பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,20,716 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 88 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.

மதுரையில் கொரோனா  பாதிப்பு  10,317 ஆக உயர்வு : புதுக்கோட்டையிலும் தீவிரமாகும் தொற்று!

இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,320 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் 95,857 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இருப்பினும் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொற்று அதிகரித்துள்ளது.

மதுரையில் கொரோனா  பாதிப்பு  10,317 ஆக உயர்வு : புதுக்கோட்டையிலும் தீவிரமாகும் தொற்று!

இந்நிலையில் மதுரையில் மாவட்டத்தில் மேலும் 260 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 10,317 ஆக அதிகரித்துள்ளது. அதே சமயம் புதுக்கோட்டையில் மேலும் 95 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில் அங்கு மொத்த பாதிப்பு 1,810 ஆக உயர்ந்துள்ளது.