சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த காவலர் போக்சோவில் கைது

 

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த காவலர் போக்சோவில் கைது

மதுரை

மதுரையில் உறவுக்கார சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த காவலரை போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மதுரை மாவட்டம் அங்காடி மங்கலத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் சிலைமான் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த காவலர் போக்சோவில் கைது

இந்நிலையில், நேற்று சதீஷ்குமார், தனது கிராமத்தை சேர்ந்த உறவுக்கார சிறுமியை வீட்டிற்கு அழைத்துச்சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார்.
இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் சிலைமான் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து காவலர் சதீஷ்குமார் மீது போக்சோ உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.