சொத்து தகராறில் 75 வயது மூதாட்டி வெட்டிகொன்ற மகன்கள்

 

சொத்து தகராறில் 75 வயது மூதாட்டி வெட்டிகொன்ற மகன்கள்

மதுரை

திருமங்கலம் அருகே சொத்துத் தகராறில் 75 வயது மூதாட்டியை பெற்ற மகன்களும், பேரன்களும் வெட்டிகொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த சொக்கநாதன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்துக் கருப்பு(80). இவரது மனைவி பாப்பா (75). இவர்களுக்கு கண்ணன் மற்றும் பொன்ராம் என 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் சொத்துக்களை பிரிப்பது தொடர்பாக மகன்களுக்கும், பாப்பா

சொத்து தகராறில் 75 வயது மூதாட்டி வெட்டிகொன்ற மகன்கள்

தம்பதியினருக்கும் இடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக திருமங்கலம் காவல்நிலையத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், வீட்டில் இருந்த மூதாட்டி பாப்பாவை அவரது மகன்கள், மற்றும் பேரன் பேத்திகள் இணைந்து அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர். தகவலின் பேரில் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.