ஸ்டாலின் உருவ பொம்மை எரிப்பு – 15 பேர் கைது

 

ஸ்டாலின் உருவ பொம்மை எரிப்பு – 15 பேர் கைது

மதுரை

மதுரையில் திமுக தலைவர் ஸ்டாலினின் உருவ பொம்மை எரிக்கப்பட்ட சம்பவத்தில், பாரதிய பார்வர்ட் பிளாக் கட்சியை சேர்ந்த 15 பேரை போலீசார்
கைதுசெய்தனர். தேவர் குருபூஜையின்போது வழங்கப்பட்ட திருநீற்றை ஸ்டாலின் நெற்றியில் பூசாமல் தவிர்த்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிய பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பில் தொடர் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

ஸ்டாலின் உருவ பொம்மை எரிப்பு – 15 பேர் கைது

இதன் தொடர்ச்சியாக மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலை முன்பு
அக்கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு ஸ்டாலினின் உருவ பொம்மையை தீவைத்து எரித்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டதுடன், போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனையடுத்து, கொடும்பாவி எரிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உதவி ஆணையர் தலைமையிலான போலீசார் கைதுசெய்தனர்