ஓபிஎஸ், எடப்பாடி பதவிகளை அங்கீகரித்தது சட்டவிரோதமா? – ஹைகோர்ட் அதிரடி உத்தரவு!

 

ஓபிஎஸ், எடப்பாடி பதவிகளை அங்கீகரித்தது சட்டவிரோதமா? – ஹைகோர்ட் அதிரடி உத்தரவு!

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மரணத்துக்குப் பின் 2017 செப்டம்பர் 12ஆம் தேதி நடத்திய பொதுக் குழு கூட்டத்தில், பொதுச்செயலாளர் பதவியை கலைத்து விட்டு, ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என புதியதாக இரு பதவிகளை உருவாக்கிய தீர்மானத்தை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டதை எதிர்த்து திருச்செந்தூரை சேர்ந்த அதிமுக உறுப்பினர் ராம்குமார் ஆதித்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

ஓபிஎஸ், எடப்பாடி பதவிகளை அங்கீகரித்தது சட்டவிரோதமா? – ஹைகோர்ட் அதிரடி உத்தரவு!

அந்த மனுவில், அதிமுக கட்சி விதிப்படி, புதிய பதவிகளை உருவாக்க பொதுக்குழுவுக்கு அதிகாரம் இல்லையென்பதால், இதுசம்பந்தமாக கட்சி விதிகளில் கொண்டு வரப்பட்ட திருத்தக்களை ஏற்று தேர்தல் ஆணையம் 2018 மே 4ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும், ஜெயலலிதா மரணத்தின் போது அமலில் இருந்த விதிகளை பின்பற்ற அதிமுக தலைமைக்கு உத்தரவிட தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடவேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.

ஓபிஎஸ், எடப்பாடி பதவிகளை அங்கீகரித்தது சட்டவிரோதமா? – ஹைகோர்ட் அதிரடி உத்தரவு!

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி அளித்த தீர்மானத்தை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்வதில் எந்த சட்ட விரோதமும் இல்லை எனவும், இதில் உள்கட்சி விதிகள் பின்பற்றப்பட்டதா, இல்லையா என தேர்தல் ஆணையம் ஆராய முடியாது எனவும் கூறி, வழக்கை முடித்து வைத்தது. மேலும், தேர்தல் ஆணையம், உள்கட்சி விவகாரங்களில் தலையிட முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக சிவில் வழக்கு தான் தொடர முடியும் எனவும் குறிப்பிட்டனர்.