டிஜிட்டல் ஊடகங்களை கண்காணிக்கும் மத்திய அரசு – புதிய ஐடி விதிக்கு இடைக்கால தடை விதித்த ஹைகோர்ட்!

 

டிஜிட்டல் ஊடகங்களை கண்காணிக்கும் மத்திய அரசு – புதிய ஐடி விதிக்கு இடைக்கால தடை விதித்த ஹைகோர்ட்!

சமூக ஊடகங்களில் இந்தியாவின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் எதிரான தகவல்கள் பகிரப்படுவதாக கூறி, அதை தடுப்பதற்காக கடந்த பிப்ரவரி மாதம் புதிய தகவல் தொழில்நுட்பம் (ஐடி) விதிகள்-2021ஐ மத்திய அரசு கொண்டு வந்தது இந்த விதிகளை செல்லாது என அறிவிக்க கோரி கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, நாடு முழுவதும் உள்ள அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் உறுப்பினர்களாக உள்ள டிஜிட்டல் நியூஸ் பப்ளிஷர்ஸ் அசோசியேஷன் உள்ளிட்டோர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

டிஜிட்டல் ஊடகங்களை கண்காணிக்கும் மத்திய அரசு – புதிய ஐடி விதிக்கு இடைக்கால தடை விதித்த ஹைகோர்ட்!

இந்த வழக்குகள் தொடர்பாக பதிலளித்த மத்திய அரசு, சமூக வலைதளங்களை ஒழுங்குபடுத்தவும், ஆன்லைன் செய்திகளை ஒழுங்குபடுத்தவுமே விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், ஒரு சட்டத்தால் தடை செய்யப்பட்ட விஷயங்களை வெளியிடவோ, பரப்பவோ கூடாது எனவும் தெரிவித்தது. நாட்டின் ஒற்றுமை இறையாண்மைக்கு ஊறு விளைவிப்பது, நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவது, அண்டை நாட்டு உறவை குலைக்கும் தகவலை பகிர்வது போன்ற செயல்பாடுகளை தடுக்கும் வகையிலேயே சட்டம் கொண்டு வரப்பட்டதாகவும் கூறப்பட்டது.

டிஜிட்டல் ஊடகங்களை கண்காணிக்கும் மத்திய அரசு – புதிய ஐடி விதிக்கு இடைக்கால தடை விதித்த ஹைகோர்ட்!

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு மும்பை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளதாகவும், அந்த உத்தரவு நாடு முழுவதற்கும் பொருந்தும் எனவும் தெரிவித்தார். மேலும், இந்த விதிகளை எதிர்த்த வழக்குகளை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரிய வழக்கு அக்டோபர் முதல் வாரம் விசாரணைக்கு வர உள்ளதாகவும் தெரிவித்தார்.

டிஜிட்டல் ஊடகங்களை கண்காணிக்கும் மத்திய அரசு – புதிய ஐடி விதிக்கு இடைக்கால தடை விதித்த ஹைகோர்ட்!

அப்போது குறுக்கிட்ட மனுதாரர் தரப்பு மூத்த வழக்கறிஞர், மும்பை உயர்நீதிமன்ற உத்தரவு நாடு முழுவதும் பொருந்தும் என கூறும் நிலையில், விதிகளை பின்பற்றும்படி டிஜிட்டல் பப்ளிஷர்ஸ் அமைப்பு உறுப்பினர்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக குற்றம் சாட்டினார். மேலும், புதிய ஐடி விதியின் 9வது பிரிவின் 3வது உட்பிரிவு டிஜிட்டல் ஊடகங்களை மத்திய அரசு கண்காணிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். இதையடுத்து, மத்திய அரசு கண்காணிப்பு நடைமுறை மூலம் ஊடகங்களை கட்டுப்படுத்துவது, ஊடகங்களின் சுதந்திரத்தை பறிக்கும் செயல் எனக் கூறிய நீதிபதிகள், அந்த பிரிவுக்கு இடைக்கால தடை விதித்தனர்.