சென்னை டாக்டர் சைமன் உடலை தோண்டி எடுக்க மீண்டும் தடை… கவலையில் மனைவி!

 

சென்னை டாக்டர் சைமன் உடலை தோண்டி எடுக்க மீண்டும் தடை… கவலையில் மனைவி!

கொரோனா வைரஸ் பாதிப்பால் மரணமடைந்த நரம்பியல் மருத்துவர் சைமன் ஹெர்குலிஸின் உடலை, கடந்த ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டம் மற்றும் வேலாங்காடு பகுதிகளில் அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். அவரின் உடலை எடுத்துவந்த ஆம்புலன்ஸ் வாகனங்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர்.

சென்னை டாக்டர் சைமன் உடலை தோண்டி எடுக்க மீண்டும் தடை… கவலையில் மனைவி!

இதனால் சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் படுகாயமடைந்தனர். பின், மருத்துவர் சைமனின் உடல், வேலங்காடு மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சைமன் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக டி.பி.சத்திரம், அண்ணா நகர் கவால் நிலையங்களில் வழக்கு பதியப்பட்டு, 40க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை டாக்டர் சைமன் உடலை தோண்டி எடுக்க மீண்டும் தடை… கவலையில் மனைவி!

இந்நிலையில், வேலங்காடு மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட சைமனின் உடலைத் தோண்டி எடுத்து, கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யக் கோரி அவரது மனைவி ஆனந்தி, சென்னை மாநகராட்சியிடம் கோரிக்கை மனு கொடுத்தார். அதைப் பரிசீலித்த சென்னை மாநகராட்சி ஆணையர், ஆனந்தியின் கோரிக்கையை நிராகரித்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி மருத்துவர் சைமனின் மனைவி ஆனந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

சென்னை டாக்டர் சைமன் உடலை தோண்டி எடுக்க மீண்டும் தடை… கவலையில் மனைவி!

இந்த வழக்கில் தீர்ப்பளித்த தனிநீதிபதி அப்துல் குத்தூஸ், வேலங்காடு மயானத்தில் இருந்து மருத்துவர் சைமன் உடலை எடுத்து கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்திலேயே மீண்டும் அடக்கம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். இதை எதிர்த்து சென்னை மாநகராட்சி உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த மனு இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநகராட்சி தரப்பில், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை தோண்டி எடுத்து மீண்டும் மறு அடக்கம் செய்வது சாத்தியமில்லை என்று கூறப்பட்டது.

சென்னை டாக்டர் சைமன் உடலை தோண்டி எடுக்க மீண்டும் தடை… கவலையில் மனைவி!

இதனையடுத்து நீதிபதிகள் அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவுக்குத் தடைவிதித்தனர். தனது முன்னோர்களின் உடல் அடக்கம் செய்த கல்லறை தோட்டத்தில் தன்னையும் அடக்கம் செய்ய வேண்டும் என்பதே சைமனின் ஆசை. இதனை அவரது மனைவி கூறியிருந்தார். அதன் காரணமாகவே வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கில் கடந்த முறை அவருக்குச் சாதகமாக தீர்ப்பு வெளியாகியிருந்தது. தற்போது அவரை கவலையுற செய்துள்ளது.