புகார்தாரர்கள் அந்தர் பல்டி… அமைச்சர் செந்தில் பாலாஜி கிரேட் எஸ்கேப் – வழக்கை ரத்துசெய்தது ஹைகோர்ட்!

 

புகார்தாரர்கள் அந்தர் பல்டி… அமைச்சர் செந்தில் பாலாஜி கிரேட் எஸ்கேப் – வழக்கை ரத்துசெய்தது ஹைகோர்ட்!

முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் இப்போது மின்சாரத் துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி, போக்குவரத்து துறையில் வேலை தருவதாகக் கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக புகார்கள் அளிக்கப்பட்டன. இப்புகார்களின் அடிப்படையில் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

புகார்தாரர்கள் அந்தர் பல்டி… அமைச்சர் செந்தில் பாலாஜி கிரேட் எஸ்கேப் – வழக்கை ரத்துசெய்தது ஹைகோர்ட்!

இதில் ஒரு வழக்கில் குற்றப்பத்திரிகை நகல் பெறுவதற்காக நேரில் ஆஜராகும்படி, அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு சென்னை எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கிடையில் அந்த வழக்கை ரத்து செய்யக் கோரி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சண்முகம் என்பவர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி நிர்மல் குமார் முன் விசாரணைக்கு வந்தது.

புகார்தாரர்கள் அந்தர் பல்டி… அமைச்சர் செந்தில் பாலாஜி கிரேட் எஸ்கேப் – வழக்கை ரத்துசெய்தது ஹைகோர்ட்!

அப்போது காணொலிக் காட்சி மூலம் ஆஜராகியிருந்த புகார்தாரர்கள், பணத்தைத் திருப்பி பெற்றுக் கொண்டதாக தெரிவித்தனர். இதை பதிவுசெய்து கொண்ட நீதிபதி, வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வழக்கை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ள விவரத்தை குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து, உயர் நீதிமன்ற உத்தரவின் நகலை சமர்ப்பிக்க உத்தரவிட்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி, விசாரணையை ஆகஸ்ட் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.