“திமுக அரசு விட்டாலும் நாங்க விட மாட்டோம்” – எஸ்.பி. வேலுமணியை கதிகலங்க வைக்கும் உயர் நீதிமன்றம்!

 

“திமுக அரசு விட்டாலும் நாங்க விட மாட்டோம்” – எஸ்.பி. வேலுமணியை கதிகலங்க வைக்கும் உயர் நீதிமன்றம்!

சென்னை, கோவை மாநகராட்சி டெண்டர்களில் முறைகேடு செய்ததாக அப்போதைய அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான புகார் மீது நீதிமன்ற மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட கோரி திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி, அறப்போர் இயக்கம் சார்பில் ஜெயராம் வெங்கடேசன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

“திமுக அரசு விட்டாலும் நாங்க விட மாட்டோம்” – எஸ்.பி. வேலுமணியை கதிகலங்க வைக்கும் உயர் நீதிமன்றம்!

அப்போது, சென்னை, கோவை மாநகராட்சிகளில் 220 டெண்டரில் முறைகேடு நடந்திருப்பதாக எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான புகாரில் முகாந்திரம் உள்ளதா என்பது குறித்து ஆரம்பக்கட்ட விசாரணை முடிவடைந்திருப்பதாகவும், அதில் வேலுமணி மீது வழக்கு பதிவு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என முதலமைச்சர், அமைச்சரவை, தலைமைச் செயலருக்கு அறிக்கை அனுப்பியதாகவும், அதை அவர்கள் ஏற்றுகொண்டதாகவும், அதனால் இந்த வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்றும் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது தமிழ்நாடு அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

“திமுக அரசு விட்டாலும் நாங்க விட மாட்டோம்” – எஸ்.பி. வேலுமணியை கதிகலங்க வைக்கும் உயர் நீதிமன்றம்!

இதற்கு மனுதாரர் தரப்பில், ஆரம்பகட்ட விசாரணை முடிவடைந்தாலும் அமைச்சருக்கு நற்சான்று அளிக்கப்படவில்லை என்றும், இந்த வழக்கை நேரடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அறப்போர் இயக்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுரேஷ், இந்த வழக்கில் நிறைய ஆதாரங்கள், ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டியிருப்பதால் வழக்கு விசாரணையை நேரடி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும், தற்போது ஆட்சி மாறி உள்ளதால் வழக்கு விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

“திமுக அரசு விட்டாலும் நாங்க விட மாட்டோம்” – எஸ்.பி. வேலுமணியை கதிகலங்க வைக்கும் உயர் நீதிமன்றம்!

வேலுமணி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்கி, ஏற்கனவே அரசு சிறப்பு அதிகாரியை நியமித்து விசாரணை நடத்தியதில் எந்தக் குற்றச்சாட்டும் இல்லை எனவும், இந்த விசாரணை அறிக்கையை அரசு ஏற்றுக் கொண்டதாகவும் தெரிவித்தார். ஆகவே இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல எனவும் வாதிட்டார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் விசாரணை அறிக்கையை அரசு ஏற்றுக் கொண்டாலும், நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை எனவும் வழக்கை விரிவாக விசாரிக்க வேண்டும் எனக் கூறி 4 வாரத்துக்கு ஒத்திவைத்துள்ளனர்.