“பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு பணப்பலன்களுக்கு வேட்டு வைத்த மத்திய அரசு”

 

“பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு பணப்பலன்களுக்கு வேட்டு வைத்த மத்திய அரசு”

1961ஆம் ஆண்டு மகப்பேறு பயன் சட்டம் இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி, பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு காலத்தில் முழு ஊதியம் பணப்பலனாக வழங்க வகை செய்யப்பட்டது. இந்நிலையில் 2020ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தில் புதிய விதியை மத்திய அரசு கொண்டு வந்தது. அதில், அகவிலைப்படி, வீட்டு வாடகை படி, ஊக்கத் தொகை ஆகியவற்றை கழித்துவிட்டு குறைந்தபட்ச ஊதியம் மட்டுமே பணப்பலனாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

“பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு பணப்பலன்களுக்கு வேட்டு வைத்த மத்திய அரசு”


இந்த அறிவிப்பை ரத்து செய்யக்கோரி அகில இந்திய பணிபுரியும் பெண்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வகிதா பர்வின் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “இதுவரை 100 சதவிகித ஊதியம், மகப்பேறு பலனாக வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அதைக் கடுமையாக குறைத்துள்ளதால் பெண்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு தடை விதிக்க வேண்டும்”
என குறிப்பிடப்பட்டிருந்தது.

“பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு பணப்பலன்களுக்கு வேட்டு வைத்த மத்திய அரசு”

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, நான்கு வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தது.