நீதித்துறையில் நிகழ்ந்த துர் மரணம்… உடனடியாக பணிகளை நிறுத்தி உத்தரவிட்ட உயர் நீதிமன்றம்!

 

நீதித்துறையில் நிகழ்ந்த துர் மரணம்… உடனடியாக பணிகளை நிறுத்தி உத்தரவிட்ட உயர் நீதிமன்றம்!

கீழமை நீதிமன்ற நீதிபதிகள் காணொலியில் வழக்குகளை விசாரிக்க அனுமதிக்க கோரி தமிழ்நாடு நீதிபதிகள் சங்கம் கடந்த வாரம் கோரிக்கை விடுத்திருந்தது. நீதிபதிகள் சங்க கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் பரிசீலித்து வந்தது. இச்சூழலில் நெல்லை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி நீஷ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இன்று உயிரிழந்தார். இந்த மரணம் ஏற்படுத்திய அதிர்வலையால் உடனடியாக கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளது.

நீதித்துறையில் நிகழ்ந்த துர் மரணம்… உடனடியாக பணிகளை நிறுத்தி உத்தரவிட்ட உயர் நீதிமன்றம்!

இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் தனபால் பிறப்பித்துள்ள உத்தரவில், “தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களின் பணிகளும் மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை நிறுத்திவைக்க வேண்டும். கைதிகளை சிறையில் அடைப்பதற்கான நடைமுறையை தவிர்த்து மற்ற பணிகள் நிறுத்தி வைக்கப்படுகின்றன.

நீதித்துறையில் நிகழ்ந்த துர் மரணம்… உடனடியாக பணிகளை நிறுத்தி உத்தரவிட்ட உயர் நீதிமன்றம்!

அனைத்து கீழமை நீதிமன்ற வளாகங்களிலும் வழக்காடிகள் மற்றும் வழக்கறிஞர்கள் ஆகியோர் வர தடை விதிக்கப்படுகிறது. நீதிபதிகளின் முன் அனுமதியைப் பெற்ற பிறகே நீதிமன்றத்திற்கு வர வேண்டும். தேவையின்றி நீதிபதிகள், நீதித்துறை ஊழியர்கள் நீதிமன்றக் கட்டடங்களுக்குள் நுழைய வேண்டாம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.