சரத்குமார் கட்சிக்கு பொதுச்சின்னம் – உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

 

சரத்குமார் கட்சிக்கு பொதுச்சின்னம் – உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சட்டப்பேரவை தேர்தலில் தங்கள் கட்சியின் சார்பில் போட்டியிடக்கூடிய அனைத்து வேட்பாளர்களுக்கும் பொதுவான சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் இந்திய ஜனநாயக கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, புதிய தமிழகம் கட்சி ஆகிய கட்சிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தன. இந்த வழக்குகள் இன்று தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

சரத்குமார் கட்சிக்கு பொதுச்சின்னம் – உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!


அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “வேட்பு மனு தாக்கல் தொடங்குவதற்கு 5 நாட்களுக்கு முன்பாகவே இந்தக் கட்சிகள் பொதுவான சின்னம் வழங்க வேண்டும் என்று கேட்டு விண்ணப்பம் அளித்திருக்க வேண்டும். இருப்பினும் மார்ச் 1ஆம் தேதி அக்கட்சிகள் விண்ணப்பித்தபோது விண்ணப்பத்தில் நிர்வாகிகளுடைய கையெழுத்து இல்லாததால் அவை நிராகரிக்கப்பட்டன. அந்தக் குறைபாடு களையப்பட்டு மறுபடியும் விண்ணப்பிக்கும்போது அவர்கள் 7ஆம் தேதிக்குப் பிறகு தான் விண்ணப்பித்திருக்கிறார்கள். அந்த அடிப்படையில் இவர்களுடைய கோரிக்கை பரிசீலிக்க முடியாது” என்றார்.

Madras High Court - Wikipedia

அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு வாக்குரிமை போல் தேர்தலில் போட்டியிடும் உரிமையும் முக்கியம் என்றனர். அக்கட்சிகளின் விண்ணப்பங்களை மறுபரிசீலனை செய்வதற்குத் தயாராக இருப்பதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இன்றே அந்த விண்ணப்பத்தை தேர்தல் ஆணையத்துக்குச் சமர்ப்பிக்க வேண்டும் என அந்த மூன்று கட்சிகளுக்கும் உத்தரவிட்டனர். மேலும் விண்ணப்பங்களைப் பரிசீலித்து நாளைக்குள் உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு ஆணையிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.