“அதே கார்… அதே வழக்கு…அதே நீதிபதி” – விஜய்யை அடுத்து தனுஷ் இமேஜும் டேமேஜ்!

 

“அதே கார்… அதே வழக்கு…அதே நீதிபதி” – விஜய்யை அடுத்து தனுஷ் இமேஜும் டேமேஜ்!

வெளிநாட்டு இறக்குமதி காருக்கு நுழைவு வரி வசூலிக்க தடை கோரிய நடிகர் விஜய் தாக்கல் செய்த வழக்கை உயர் நீதிமன்ற தனி நீதிபதி சுப்பிரமணியம் விசாரித்தார். வழக்கு இறுதி விசாரணையின்போது சரமாரியாக விமர்சித்த நீதிபதி, விஜய் ரீல் ஹீரோவாக மட்டும் இல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் ரியல் ஹீரோவாக இருக்க வேண்டும் என்றும், வரி என்பது நன்கொடையல்ல, அது கட்டாயப் பங்களிப்பு போன்ற கருத்துக்களை கூறியும் மிகக் கடுமையாக திட்டியிருந்தார். கூடவே 1 லட்சம் ரூபாய் அபராதாம் விதித்தும் உத்தரவிட்டிருந்தார். தற்போது விஜய் தரப்பு மேல் முறையீடு செய்திருக்கிறது.

“அதே கார்… அதே வழக்கு…அதே நீதிபதி” – விஜய்யை அடுத்து தனுஷ் இமேஜும் டேமேஜ்!

இந்நிலையில், நடிகர் தனுஷும் தனது இறக்குமதி காருக்கு நுழைவு வரி விலக்கு கோரி 2015ஆம் ஆண்டு தாக்கல் செய்திருந்தார். இறக்குமதி வாகனங்களுக்கு நுழைவு வரி விதிக்க தடை விதித்து கேரள உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. கேரள உயர் நீதிமன்றத்தில் உத்தரவை எதிர்த்த வழக்கில் உச்ச நீதிமன்றம், நுழைவு வரி வசூலிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளதாக 2019ஆம் ஆண்டு தீர்ப்பளித்த்து. 2015ஆம் ஆண்டு வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி வசூலிக்க தடை கோரி நடிகர் தனுஷ், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

“அதே கார்… அதே வழக்கு…அதே நீதிபதி” – விஜய்யை அடுத்து தனுஷ் இமேஜும் டேமேஜ்!

இந்த வழக்கு அதே நீதிபதி முன்னிலையிலேயே விசாரணை செய்யப்பட்டு வருகிறது. காருக்கு 60 லட்சத்து 66 ஆயிரம் ரூபாயை நுழைவு வரியாக செலுத்த வணிக வரித்துறை உத்தரவிட்டதை எதிர்த்து தனுஷ் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 50 சதவீத வரியை செலுத்தும் பட்சத்தில் காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு உத்தரவிட்டது. இச்சூழலில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் மீதான எதிர்பார்ப்பு கூடியது. நினைத்தது போலவே தனுஷையும் மிக காட்டமாக நீதிபதி சுப்பிரமணியம் விமர்சித்திருக்கிறார்.

“அதே கார்… அதே வழக்கு…அதே நீதிபதி” – விஜய்யை அடுத்து தனுஷ் இமேஜும் டேமேஜ்!

அப்போது தனுஷ் தரப்பில் வாபஸ் வாங்குவதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது சரமாரியாக விமர்சித்த நீதிபதி, “சொகுசு காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்டு வழக்கு தொடர்ந்துவிட்டு, இப்போது வாபஸ் வாங்குவதாக சொன்னால் அதை எப்படி ஏற்க முடியும்? தனது வண்டிக்கு பெட்ரோல் போடும்போது ஜி.எஸ்.டி வரி கட்ட முடியவில்லை என்று ஒரு பால்காரர் நீதிமன்றத்தை நாடுவாரா?

“அதே கார்… அதே வழக்கு…அதே நீதிபதி” – விஜய்யை அடுத்து தனுஷ் இமேஜும் டேமேஜ்!

தனது வண்டிக்கு பெட்ரோல் போடும் ஒரு பால்காரர் கூட வரி செலுத்தும்போது நீங்கள் செலுத்தினால் என்ன? கோடிக் கணக்கில் நீங்கள் சம்பளம் வாங்கினாலும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மக்கள் வரிப்பணத்தில் போடும் சாலையை பயன்படுத்தும்போது, அதற்கான வரியை செலுத்த வேண்டியதுதானே? மனுவில் தான் ஒரு நடிகர் என ஏன் தனுஷ் குறிப்பிடவில்லை. யார் வழக்கு தொடர்ந்தாலும் தான் யார், என்ன தொழில் செய்பவர் என்பதை மனுவில் தெரிவிக்க வேண்டும். தான் ஒரு நடிகர் என்பதை மறைத்தது குறித்து தனுஷ் விளக்கம் அளிக்க வேண்டும். இன்று பிற்பகல் 2:15 மணிக்குள் நுழைவு வரி பாக்கி குறித்து வணிக வரித்துறை தனுஷுக்கு தெரிவிக்க வேண்டும். இன்று பிற்பகல் 2:15 மணிக்கு இறுதி தீர்ப்பு வழங்கப்படும்” என்றார்.