கிருஷ்ணசாமி கட்சிக்கு ‘அந்த’ சின்னத்த ஒதுக்குங்க – உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

 

கிருஷ்ணசாமி கட்சிக்கு ‘அந்த’ சின்னத்த ஒதுக்குங்க – உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

புதிய தமிழகம் கட்சிக்கு தொலைக்காட்சி சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி அக்கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், “தமிழகத்தில் அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட கட்சியான புதிய தமிழகம் கட்சிக்கு, 2011ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலிலும், 2014ஆம் ஆண்டு மக்களவை தேர்தலிலும் தொலைக்காட்சி சின்னம் ஒதுக்கப்பட்டது. எதிர்வர உள்ள சட்டப்பேரவை தேர்தலில் தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

கிருஷ்ணசாமி கட்சிக்கு ‘அந்த’ சின்னத்த ஒதுக்குங்க – உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

எங்கள் கட்சிக்கு பொது சின்னமான தொலைக்காட்சி சின்னத்தை ஒதுக்கக் கோரி அளித்த மனுவை பரிசீலிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும். தொலைக்காட்சி சின்னத்தைப் போல இருக்கும் கரும்பலகை, குளிர்சாதன பெட்டி, எழுது பலகை, தீப்பெட்டி போன்ற சின்னங்கள் பொது சின்ன பட்டியல் இருப்பதால் குழப்பம் ஏற்படுகிறது. அதனால் தொலைக்காட்சி சின்னத்தைப் போல இருக்கும் சின்னங்களை பொது சின்னங்கள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Madras High Court - Wikipedia

இந்த வழக்கை தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது நீதிபதிகள், “சின்னங்கள் குழப்பம் குறித்து தாமதமாகப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற சின்னங்களிலிருந்து வேறுபடுத்தி அடையாளம் காணும் வகையில் சின்னங்களைத் தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். தொலைக்காட்சி சின்னம் ஒதுக்கக்கோரி மனுதாரர் அளித்துள்ள விண்ணப்பத்தின் மீது ஒரு வாரத்தில் தேர்தல் ஆணையம் முடிவெடுக்க வேண்டும்” என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.