“நளினி, முருகன் தாயாருடன் வாட்ஸ்அப் வீடியோ கால் பேச அனுமதி” – உயர் நீதிமன்றம் அதிரடி!

 

“நளினி, முருகன் தாயாருடன் வாட்ஸ்அப் வீடியோ கால் பேச அனுமதி” – உயர் நீதிமன்றம் அதிரடி!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள நளினி, அவரது கணவர் முருகன் ஆகியோரை லண்டனில் உள்ள முருகனின் சகோதரியுடனும், இலங்கையில் உள்ள முருகனின் தாயுடனும் வாட்ஸ்ஆப் வீடியோ மூலம் பேச அனுமதிக்க கோரி நளினியின் தாய் பத்மா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், ராஜீவ் காந்தி கொலை வழக்கின் சர்வதேச தொடர்புகள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட பன்முக விசாரணை முகமை தற்போதும் செயல்பாட்டில் உள்ளதா அல்லது விசாரணைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

“நளினி, முருகன் தாயாருடன் வாட்ஸ்அப் வீடியோ கால் பேச அனுமதி” – உயர் நீதிமன்றம் அதிரடி!

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் அமர்வில் விசாரணை நடைபெற்றது. அப்போது மத்திய அரசு சார்பில் விசாரணை முகமையின் பதவிக்காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து கடந்த ஜூலை 27ஆம் தேதி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார். சர்வதேச தொடர்புகள் குறித்த விசாரணை இன்னும் முடிவடையாத நிலையில், நளினி, முருகனை வெளிநாட்டில் உள்ள உறவினர்களுடன் பேச அனுமதிப்பது வழக்கு விசாரணையைப் பாதிக்கும் எனவும், சிறை அதிகாரிகள் மூலம் அவர்கள் பேசுவதைக் கண்காணித்தாலும் முக அசைவு மற்றும் உருவ அசைவில் கருத்துக்களைப் பரிமாற்றக் கூடும் எனவும் தெரிவித்தார்.

“நளினி, முருகன் தாயாருடன் வாட்ஸ்அப் வீடியோ கால் பேச அனுமதி” – உயர் நீதிமன்றம் அதிரடி!

தொடர்ந்து சிறைத் துறை தரப்பில் 2011ஆம் ஆண்டு அரசாணையின்படி சிறைக்கைதிகள் வெளிநாட்டில் உள்ளவர்களுடன் பேச அனுமதி இல்லை எனவும், இந்தியாவிற்குள் உள்ள உறவினர்களுடன் 10 நாளைக்கு ஒரு முறை, மாதம் ஒன்றுக்கு 30 நிமிடத்திற்கு மிகாமல் 3 அழைப்புகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவதாகவும், அது சிறைத்துறை கண்காணிப்பாளரின் அனுமதிக்கு உட்பட்டது எனவும் தெரிவித்தார். முருகன் கடந்த ஏப்ரல் மாதம் கூட, வேலூரில் உள்ள அவரது சகோதரியுடன் பேசியதாகவும், நளினியும் கடந்த மார்ச் மாதம் அவரது உறவினர்களுடன் பேசியுள்ளதாகவும் தெரிவித்தார்.

“நளினி, முருகன் தாயாருடன் வாட்ஸ்அப் வீடியோ கால் பேச அனுமதி” – உயர் நீதிமன்றம் அதிரடி!

தந்தை இறந்துவிட்ட நிலையில் தாய்க்கு ஆறுதல் கூற, சிறைத்துறை அதிகாரிகள் முன்னிலையில் அழைப்பை பதிவு செய்துகொள்ளும் வசதியுடன் பேச அனுமதிக்கலாமே என தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தனர். இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி அமர்வு நளினி, முருகன் ஆகியோர் லண்டனில் உள்ள முருகனின் சகோதரியிடமும் இலங்கையிலுள்ள முருகனின் தாயாருடனும் வாட்ஸ்அப் வீடியோ காலில் பேச அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.