மன்னிப்பு கேட்க வேண்டும்… இல்லைன்னா கங்கனாவின் சூட்டிங்கை நிறுத்துவோம்.. காங்கிரஸ் மிரட்டல்…

 

மன்னிப்பு கேட்க வேண்டும்… இல்லைன்னா கங்கனாவின் சூட்டிங்கை நிறுத்துவோம்.. காங்கிரஸ் மிரட்டல்…

விவசாயிகள் குறித்து சர்ச்சைக்குரிய டிவிட் செய்ததற்கு நடிகை கங்கனா ரானாவத் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையென்றால் அவரது படப்பிடிப்பை நிறுத்துவோம் என்று மத்திய பிரதேச காங்கிரசார் எச்சரிக்கை செய்தனர்.

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் அண்மையில் டிவிட்டரில், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை தீவிரவாதிகள் என்று சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து இருந்ததாக தெரிகிறது. மேலும் அந்த டிவிட்டை டிவிட்டர் நிறுவனம் நீக்கியது குறிப்பிடத்தக்கது. தற்போது, மத்திய பிரதேசத்தில் பெத்துல மாவட்டத்தின் சர்னி பகுதியில் நடைபெறும் படப்பிடிப்பில் கங்கனா உள்ளார்.

மன்னிப்பு கேட்க வேண்டும்… இல்லைன்னா கங்கனாவின் சூட்டிங்கை நிறுத்துவோம்.. காங்கிரஸ் மிரட்டல்…
காங்கிரஸ்

இந்த சூழ்நிலையில், அந்த சர்ச்சைக்குரிய டிவிட்டுக்காக கங்கனா மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையென்றால் அவரது படப்பிடிப்பை நிறுத்துதுவோம் என்று அம்மாநில காங்கிரஸ் எச்சரிக்கை செய்துள்ளது. ஆனால் சகோதரி-மகள் கங்கனா படப்பிடிப்பின் போது எந்த பிரச்சினையும் எதிர்க்கொள்ள மாட்டார் என்று அம்மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா உறுதி அளித்துள்ளார்.

மன்னிப்பு கேட்க வேண்டும்… இல்லைன்னா கங்கனாவின் சூட்டிங்கை நிறுத்துவோம்.. காங்கிரஸ் மிரட்டல்…
நரோட்டம் மிஸ்ரா

நரோட்டம் மிஸ்ரா இது தொடர்பாக கூறுகையில், மாநில காங்கிரஸ் தலைவர் கமல் நாத் தனது கட்சி தொண்டர்கள் படப்பிடிப்புக்கு இடையூறு விளைவிப்பதைக் தடுக்க வேண்டும். நான் பெத்துல் காவல்துறை கண்காணிப்பாளருடன் தொலைப்பேசியில் பேசினேன். சட்டம் தனது சொந்த நடவடிக்கை எடுக்கும் மற்றும் கடைப்பிடிக்கும். நான் சகோதரி-மகள் கங்கனாவை தொடர்புகொள்ள முயற்சிக்கிறேன். அவள் (கங்கனா) எந்த பிரச்சினையும் எதிர்கொள்ள மாட்டாள் என்று தெரிவித்தார்.