பிரதமர் என்னிடம் உடல் நலம் குறித்து விசாரித்தார்.. ம.பி. முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தகவல்..

 

பிரதமர் என்னிடம் உடல் நலம் குறித்து விசாரித்தார்.. ம.பி. முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தகவல்..

மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் போபாலில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) பிரதமர் மோடி தன்னை போனில் தொடர்பு கொண்டு தனது உடல் நலம் குறித்து விசாரித்ததாக முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

பிரதமர் என்னிடம் உடல் நலம் குறித்து விசாரித்தார்.. ம.பி. முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தகவல்..

சிவ்ராஜ் சிங் சவுகான் இது தொடர்பாக டிவிட்டரில், பிரதமர் நரேந்திர மோடிஜி நேற்று எனது உடல் நலம் குறித்து விசாரித்தார். பிரதமர் முதல் முறை அழைத்தது போது நான் தியானம் மற்றும் யோகா செய்து கொண்டிருந்ததால் நான் அவரிடம் பேசவில்லை. சிறிது நேரம் கழித்து அவர் மீண்டும் என்னை அழைத்தார். அப்போது என்னிடம் உடல் நலம் குறித்து விசாரித்தார், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி எனக்கு அறிவுரை வழங்கினார் என பதிவு செய்தார்.

பிரதமர் என்னிடம் உடல் நலம் குறித்து விசாரித்தார்.. ம.பி. முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தகவல்..

சிவ்ராஜ் சிங் சவுகான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோதிலும், வீடியோ கான்பரன்சிங் வாயிலாக கோவிட்-19 நிலவரம் மற்றும் தொற்றுநோயை தடுப்பதற்கான அரசின் நடவடிக்கைகளை ஆய்வு செய்தார். கோவிட்-19 பரவலை திறம்பட குறைக்க, மக்கள் மற்றும் சமூக சேவை அமைப்புகளின் ஒத்துழைப்பை பெறுவது மிகவும் முக்கியம் என சிவ்ராஜ் சிங் சவுகான் வலியுறுத்தினார்.