அனுமன் துதியை சொல்வது நல்லவர்களுக்கு மட்டுமே உதவும், பேய்களுக்கு அல்ல, கமல் நாத்தை தாக்கிய சவுகான்

 

அனுமன் துதியை சொல்வது நல்லவர்களுக்கு மட்டுமே உதவும், பேய்களுக்கு அல்ல, கமல் நாத்தை தாக்கிய சவுகான்

மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் கமல் நாத் கடந்த 5ம் தேதியன்று ராமர் கோயில் கட்டுமான பணிக்களுக்கான பூமி பூஜையன்று தனது வீட்டில் அனுமன் பூஜையை நடத்தினார். அப்போது அனுமன் துதி ஓதப்பட்டது. தற்போது அந்த சம்பவத்தை குறிப்பிட்டு கமல் நாத்தை பேய் என மறைமுகமாக தாக்கியுள்ளார் மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான்.

அனுமன் துதியை சொல்வது நல்லவர்களுக்கு மட்டுமே உதவும், பேய்களுக்கு அல்ல, கமல் நாத்தை தாக்கிய சவுகான்
கமல் நாத்

மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் இது குறித்த கூறுகையில், கட்டுமான பணிக்களுக்கான பூமி பூஜையன்று (ராமர் கோயில்) கமல் நாத் ஜி அனுமன் துதியை பாராயணம் செய்தார். அனுமன் துதியை சொல்வது நல்லவர்களுக்கு மட்டுமே உதவும், பேய்களுக்கு அல்ல என தெரிவித்தார்

அனுமன் துதியை சொல்வது நல்லவர்களுக்கு மட்டுமே உதவும், பேய்களுக்கு அல்ல, கமல் நாத்தை தாக்கிய சவுகான்
ராஜீவ் காந்தி

அண்மையில் கமல் நாத் பேட்டி ஒன்றில், 1985ல் ராமஜென்ம பூமி கதவுகளை ராஜீவ் காந்தி திறந்தார். அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என கூறினார். அந்த நேரத்திலிருந்து ஒரு உணர்வு ( ராமர் கோயில் கட்டுவதற்கு) வெளிப்பட்டது. யாராவது அதற்கான நற்பெயரை வாங்க முயற்சித்தால் அது தவறாக இருக்கும் என தெரிவித்து இருந்தார்.