நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை இறந்த சோகத்தில், இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

 

நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை இறந்த சோகத்தில், இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

சென்னை

மதுரவாயல் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை இறந்த சோகத்தில், இளம்பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மதுரவாயல் அருகேயுள்ள துண்டலம் எம்.ஜி.ஆர் தெருவை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் மூர்த்தி(48). இவரது மகள் அஸ்வினி(21). நர்சிங் படித்துள்ள அஸ்வினிக்கு, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வேலூரை சேர்ந்த பிரகாஷ் என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் பிரகாஷ் சாலை விபத்தில் சிக்கி உயரிழந்துள்ளார்.

நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை இறந்த சோகத்தில், இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

இதனால், அஸ்வினி வேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த அவர், தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். நீண்டநேரம் அறை திறக்காததால் சந்தேகமடைந்த மூர்த்தி கதவை உடைத்து சென்று பார்த்தபோது, அஸ்வினி தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மதுரவாயல் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை உயிரிழந்த சோகத்தில், அஸ்வினி தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.