நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்பேரவையில் நாளை மறுநாள் தீர்மானம்.!

 

நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்பேரவையில் நாளை மறுநாள் தீர்மானம்.!

சென்னையை அடுத்த பெரும்பாக்கத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்ரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.

நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்பேரவையில் நாளை மறுநாள் தீர்மானம்.!


தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பெரும்பாக்கத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை கட்டமைப்பு குறைவாக உள்ளதால் மேம்படுத்தப்படவுள்ளது. இந்தியாவிலேயே முதன்முறையாக நாளை ஒரே நாளில் 40 ஆயிரம் முகாம் நடைபெற உள்ளது. இருபது லட்சம் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தியவர்கள் மொத்த எண்ணிக்கை நான்கு கோடியை நாளை எட்டும், இரண்டாம் டோஸ் செலுத்தாமல் உள்ள 18 லட்சம் பேருக்கு சிறப்பு கவனம் செலுத்தி தடுப்பூசிகள் செலுத்தப்படும்

மக்களைத் தேடி மருத்துவம் தொடங்கி ஒரு மாதத்தில் மட்டும் 4 லட்சத்து 7 ஆயிரம் பேர் பயன் அடைந்துள்ளனர். விரைவில் அனைத்து இடங்களிலும் இத்திட்டம் விரிவு படுத்தப்படும். தமிழக அரசு விரும்பாத நிகழ்வு நாளை நடைபெற உள்ள நீட் தேர்வு. நீட் தேர்வுக்கு எதிராக 13ம் தேதி முதல்வரால் தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளது. பின் குடியரசு தலைவருக்கு அனுப்பி அழுத்தம் தரப்படும்.

கடந்த காலம் போல தேர்வுக்கு முன், மாணவர்களுக்கு சோதனை என்ற பெயரில் அழுத்தம் தரமால் மென்மையாக தேர்வு நடைபெறும்” என தெரிவித்தார்.