ஊரடங்கு மேலும் தீவிரப்படுத்தப்படவுள்ளது! அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு

 

ஊரடங்கு மேலும் தீவிரப்படுத்தப்படவுள்ளது! அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு

கொரோனா பரவல் குறித்து அனைத்துக்கட்சி உறுப்பினர்களுடனும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். முழு ஊரடங்கை தீவிரப்படுத்த சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம் நிறைவேற்றப்பட்டது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்படி,

1.கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு அனைத்து கட்சிகளும் முழு ஒத்துழைப்பு நல்குவது

2.தொற்று பரவல் காலகட்டத்தில் பொதுக்கூட்டங்கள், அரசியல் நிகழ்வுகளை அனைத்துகட்சிகளும் முற்றிலுமாக நிறுத்துவது

3.அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்ற மக்களை அனைத்து கட்சிகளும் அறிவுறுத்துதல்

4.தொற்று பரவலை கட்டுப்படுத்த ஆலோசனைகளை வழங்க, சட்டமன்ற கட்சிகளை சார்ந்த உறுப்பினர்களை கொண்ட ஆலோசனைக்குழு அமைக்கலாம்

  1. தமிழகத்தில் அமலில் உள்ள ஊரடங்கு விதிமுறைகளை மேலும் தீவிரப்படுத்துவது
ஊரடங்கு மேலும் தீவிரப்படுத்தப்படவுள்ளது! அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு

இந்நிலையில் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “கொரோனா நோய்த்தொற்றை கட்டுபடுத்த அனைத்து கட்சியும் முழு ஒத்துழைப்பு வழங்குவது உள்ளிட்ட 5 தீர்மானங்கள் அனைத்துக்கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது அமலில் உள்ள ஊரடங்கு மேலும் தீவிரப்படுத்தப்படவுள்ளது” எனக் கூறினார்.