“எல்லாத்துக்கும் லைகா தான் காரணம்” – உண்மையை புட்டு புட்டு வைத்த இயக்குநர் ஷங்கர்!

 

“எல்லாத்துக்கும் லைகா தான் காரணம்” – உண்மையை புட்டு புட்டு வைத்த இயக்குநர் ஷங்கர்!

நடிகர் கமல் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தை முடிக்காமல், வேறு படங்களை இயக்க இயக்குநர் ஷங்கருக்கு தடை விதிக்கக் கோரி லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கில் ஷங்கர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், “பல உண்மை தகவல்களை மறைத்து லைகா நிறுவனம் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது. முதலில் இந்தப் படத்தை தில்ராஜு என்பவர் தயாரிக்க முன் வந்தார். பின் அவரைச் சமாதானப்படுத்தி படத்தைத் தயாரிக்க லைகா நிறுவனம் முன்வந்தது.

“எல்லாத்துக்கும் லைகா தான் காரணம்” – உண்மையை புட்டு புட்டு வைத்த இயக்குநர் ஷங்கர்!

2017ஆம் ஆண்டு செப்டம்பரில் படத்துக்கான முன் தயாரிப்புப் பணிகள் தொடங்கின. 2018ஆம் ஆண்டு மே மாதம் முதல் படப்பிடிப்பை தொடங்க முடிவு செய்ய்யப்பட்டது. படத்தைத் தயாரிக்க 270 கோடி ரூபாய் செலவாகும் என பட்ஜெட் போட்ட நிலையில், அதைக் குறைக்கும்படி லைகா நிறுவனம் கூறியது. அதை ஏற்று பட்ஜெட்டை 250 கோடியாக குறைத்தும், படப்பிடிப்பை தொடங்குவதில் தேவையில்லாத தாமதத்தை ஏற்படுத்தியது.

“எல்லாத்துக்கும் லைகா தான் காரணம்” – உண்மையை புட்டு புட்டு வைத்த இயக்குநர் ஷங்கர்!

தில்ராஜு படத்தைத் தயாரித்திருந்தால் படம் ஏற்கனவே வெளியாகியிருக்கும். ஆனால் லைகா தரப்பில் அரங்குகள் அமைத்து தருவதில் தாமதம், நிதி ஒதுக்கீடில் தாமதம் போன்ற காரணங்களால் படப்பிடிப்பு தாமதமானது. நடிகர் கமலுக்கு மேக் அப் அலர்ஜி ஏற்பட்டதாலும் படப்பிடிப்பு தாமதமானது. அதற்கு நான் பொறுப்பல்ல. இதுதவிர படப்பிடிப்பின் போது கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டது, கொரோனா ஊரடங்கு போன்ற காரணங்களாலும் படப்பிடிப்பு தாமதமானது. பட தயாரிப்புப் பணிகளில் ஏற்பட்ட நஷ்டத்துக்கு நான் பொறுப்பல்ல.

“எல்லாத்துக்கும் லைகா தான் காரணம்” – உண்மையை புட்டு புட்டு வைத்த இயக்குநர் ஷங்கர்!

வரும் ஜூன் முதல் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க தயாராக இருக்கிறேன். அதைக் கருத்தில் கொள்ளாமல் எனக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு ஜூன் முதல் 2021ஆம் ஆண்டு மே வரையிலான ஓராண்டு காலத்தை வீண்டித்தது லைகா நிறுவனம் தான். இந்தக் காலத்தில் நான் சும்மா இருக்க முடியாது. லைகா நிறுவனம் தாக்கல் செய்த இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், விசாரணையை ஜூன் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.