சொகுசு காரில் வந்து ஆடுகளை திருடும் கும்பல்: சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை

 

சொகுசு காரில் வந்து ஆடுகளை திருடும் கும்பல்: சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை

வேளாங்கண்ணியை அடுத்த பிரதாபராமபுரம் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன். இவர் வீட்டில் வளர்த்து வரும் 30 ஆயிரம் மதிப்புள்ள ஆடுகளை மர்ம நபர்கள் சொகுசு காரில் கடத்தி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

சொகுசு காரில் வந்து ஆடுகளை திருடும் கும்பல்: சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை

நள்ளிரவு பிரதாபராமாபுரம் பகுதிக்கு இருசக்கர வாகனம் மற்றும் காரில் வந்த மர்ம நபர்கள் அவரது வீட்டில் கட்டி வைத்திருந்த 30 ஆயிரம் மதிப்புள்ள இரண்டு ஆடுகளை காரில் கடத்தி சென்றுள்ளனர்.

ஆடு திருட்டு குறித்து கீழையூர் காவல் நிலையத்தில் குணசேகரன் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து இந்த பகுதியில் 10க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆடுகள் திருடு போய் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே உடனடியாக காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

சொகுசு காரில் வந்து ஆடுகளை திருடும் கும்பல்: சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை

இந்தப்புகாரின் அடிப்படையில் போலீசார் அப்பகுதியில் அமைத்திருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், சொகுசு காரில் வந்து ஆடுகளை திருடிச்செல்லும் காட்சிகள் பதிவாகி இருக்கிறது.

ஆடுகளை கடத்தி செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி அக்கிராமத்தினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.